Change View:     
தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
(சனிக்கிழமை 15 மார்ச் 2014)     
நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் சிந்தித்து வாக்களியுங்கள் என்று கும்மிடிப்பூண்டி பிரசார கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
(வெள்ளிக்கிழமை 14 மார்ச் 2014)     
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கினார். ‘சில தலைவர்கள் ஹிட்லர் போன்றவர்கள்; நான் மகாத்மா காந்தி வழியில் நடப்பவன்’என அவர் கூறினார்.
(வெள்ளிக்கிழமை 14 மார்ச் 2014)     
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா திடலில் ஊழல் எதிர்ப்பாளர் அண்ணா ஹசாரேயுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் அண்ணா ஹசாரே திடீரென உடல் நிலை சரியில்லை என்று கழன்று கொண்டார்.
(வெள்ளிக்கிழமை 14 மார்ச் 2014)     
காங்கிரஸ் இளவரசர், நாடு முழுவதும் சுற்றிச்சுற்றி போதனையும், உபதேசமும் செய்கிறார். அவர் ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல, மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார். அவர் முதலில், மத்திய அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்த அரசு, அவரது கட்சியினுடையதா? இல்லையா? என்று விளக்க வேண்டும். என்று மோடி பேசியுள்ளார்.
(வெள்ளிக்கிழமை 14 மார்ச் 2014)     
பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டங்களில், குறிப்பாக நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இலவசமாக டீ கொடுக்கப்படுகின்றது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தேர்தல் ஆணையம், இனி பாஜக கூட்டங்களில் இலவச டீ கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
Go to / 11 page(s) | ‹‹ Prev|Next ››