Change View:
பொன்மொழிகள்
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி !
கடல் திடலாகும், திடல் கடலாகும் !
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு !
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று !
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை !
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது !
ஏரி நிறைந்தால் கரை கசியும் !
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி !
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்!
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்!
எதார்த்தவாதி வெகுசன விரோதி!
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி!
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு!
ஊண் அற்றபோது உடலற்றது!
உள்ளது போகாது இல்லது வாராது!
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
Calendar View
Go to
/ 2 page(s)
|
‹‹ Prev
|
Next ››